சென்னை, ஆக. 9- திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த வேலூர் தொகுதி வாக்காளர் களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள் ளது. இதுகுறித்து அக்கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெரு மக்களும் வேலூரில் முகா மிட்டு தங்களின் சக்தி முழு வதையும் பயன்படுத்தினர். ஆனால் வேலூர் தொகுதி மக்கள் தெளிவான முறை யில் தீர்ப்பளித்துள்ளனர். பாஜக - அதிமுக தலைமையி லான சந்தர்ப்பவாத கூட்ட ணிக்கு எதிராக வேலூர் தொகுதி மக்களின் தீர்ப்பு மூலம், சந்தர்ப்பவாதி களுக்கு தமிழ்நாட்டில் இட மில்லை என்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர். தெளிவான முறையில் தீர்ப்பளித்த வேலூர் தொகுதி வாக்காளப் பெரு மக்களுக்கும் பணியாற்றிய செயல் வீரர்களுக்கும், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.