tamilnadu

img

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்

கார்த்திகேயனுக்கு  5 நாள் சிபிசிஐடி காவல்

திருநெல்வேலி, ஆக 7- நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த வழக்கு ஆவணங்களை நெல்லை மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து  திங்கட்கிழமை  இந்த வழக்கு விசாரணையை ஜே.எம்.1-வது கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. சார்பாக ஜே.எம்.5-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. அணில் குமார், ஜே.எம்.1-வது கோர்ட்டில் கார்த்திகேயனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை  புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாஜிஸ்திரேட்டு பாபு அறிவித்தார். அதன்படி நடந்த விசாரணைக்குப் பின் கார்த்திகேயனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.