tamilnadu

img

காவலர் தேர்வு நேர்மையாக நடந்தது: தேர்வு வாரியம் பதில் மனு

சென்னை,மார்ச் 6- காவலர் உள்ளிட்ட சீருடைப்  பணியாளர்கள் தேர்வு நேர்மை யாக நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியம், 8,888 பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந் துள்ளதாகவும், அதனை சிபிஐ  விசாரிக்கவேண்டும் எனவும், திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15  பேர் சென்னை உயர் நீதிமன்றத்  தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்  பாக பதில்மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு சீருடைப்  பணியாளர் தேர்வு வாரியம், இடஒதுக்கீட்டு முறை பின் பற்றப்பட்டதுடன், மாநிலத்தில் உள்ள 32 மையங்களில் ஐ.ஜி.  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்பார்வையில், எவ்வித முறைகேடும் இன்றி தேர்வு  நடத்தப்பட்டதாக தெரிவித் துள்ளது. தேர்வுகள் வெளிப்ப டைத்தன்மையுடன் நடத்தப் பட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.