கால்பந்து உலகில் மிகவும் பழமையான கிளப் தொடரான இத்தாலி நாட்டின் ‘செரீ ஏ’ தொடரில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுவண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ‘செரீ ஏ’ தொடரின் சாம்ப்டோரியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜுவண்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. ஆட்டத்தின் முதல் கோலை அணி சாம்ப்டோரியா வீரர் கேப்ராரி அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் 45-வது நிமிடத்தில் ரொனால்டோ கோலடித்து பதிலடி கொடுத்தார். விளையாட்டில் பதிலடி கொடுப்பது சகஜமான விஷயம் தான் என்றாலும், இந்த கோலை அடிக்க ரொனால்டோ சுமார் 2.56 மீட்டர் (8.3 அடி) தாவி தலையால் கோலடித்துள்ளார். செங்குத்தாக சுமார் 71 செ.மீ., உயரம் தாவியுள்ள ரொனால்டோவின் செயல் விளையாட்டு உலகில் பெருமையாகப் பேசப்பட்டுவருகிறது. எனினும் இது சாதனை செயல் அல்ல. அமெரிக்க கண்டத்தில் பிரபலமான விளையாட்டான என்.பி.ஏ. கூடைப்பந்து விளையாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் ஜார்டன் (116.8 செ.மீ.,) சாதனை படைத்துள்ளார். தாவி கூடைக்குள் பந்தைத் தள்ளியுள்ளார். ஒட்டுமொத்த விளையாட்டு உலகில் ரொனால்டோவின் செயல் சாதனை இல்லையென்றாலும், கால்பந்து உலகில் இது சாதனையாக விதைக்கப்பட்டுள்ளது.