ஸ்பெயின் நாட்டின் முக்கிய கால்பந்து அணியான பார்சிலோனா அணியில் பிரான்ஸ் நாட்டின் தேசிய அணி வீரரும், அட்லெடிகோ மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான அன்டோய்னே கிரீஸ்மேனை பார்சிலோனா அணி 120 மில்லியன் யூரோ (920 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது. வரும் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) ஜப்பான் நாட்டில் நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில் பார்சிலோனா அணி விளையாடுகிறது. இந்த போட்டி முதல் கிரீஸ்மேன் பார்சிலோனா அணிக்குக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 வயதாகும் கிரீஸ்மேன் களத்தில் பம்பரமாகச் சுழலக்கூடியவர். பரபரப்பான கட்டத்திலும் சிரித்துக்கொண்டே கோலடிக்கும் சிறப்பு வாய்ந்த வீரர். இவரின் அசத்தலான வியூகத்தால் தான் பிரான்ஸ் அணி உலகக்கோப்பையை (2018) வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.