tamilnadu

img

திருப்பதி லட்டு விவகாரம் - ஏ.ஆர் புட் நிறுவனத்தில் திடீர் ஆய்வு!

திண்டுக்கல்,செப்.20- திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கும் நெய்யில் மாட்டு இறைச்சிக் கொழுப்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து திண்டுக்கல் ஏ.ஆர். புட் டெய்ரி நிறுவனத்தில் திடீர் ஆய்வு நடைபெற்றது.
திருப்பதி பெருமாள் கோயில் தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டு இறைச்சிக்கொழுப்பு தயாரிக்கப்படுவதாக ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் திருப்பதிக்கு நெய் அனுப்பாததாகத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி புட் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இதனையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி புட் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.