தருமபுரி, பிப். 22- வேலையின்மைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுத்துறை களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும்.டிஎன்பி எஸ்சி மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடைபெறும் முறைகேடு களை தடுத்து நிறுத்த வேண்டும். ஓய்வுபெற்றவர்களை பணியில் அமர்த்துவதை கைவிட வேண்டும்.சுயதொழில் தொடங்குவோர் அரசின் நிதி உதவியை பெற ஊழல் இல்லாமல் எளிய முறையில் கிடைப் பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட செயலாளர் இரா. எழில்அரசு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.சிலம் பரசன், மாவட்ட துணைத்தலை வர்கள் சி.வேலாயுதம், லோகு ஒன்றியச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.