tamilnadu

img

காவேரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி, செப்.21- காவேரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் இரா.கைலாசபதி, வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (வேளாண்மை) எம்.இளங்கோவன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சண்முகம் மற்றும் வேளாண்மைத் துறை மற்றும்  தரு மபுரி மாவட்ட அனைத்து அலுவ லர்கள், விவசாயிகள் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதா வது, தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீர்  பஞ்சம், ஏரிகள் நீறின்றி காணப் படுகிறது. இந்நிலையில் மழை காலங்களில் காவேரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. இந்த உபரிநீரை மாவட்ட ஏரிக ளுக்கு பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு ஏரிகளுக்கும் நிரப் பும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தை விரைந்து செயல்ப டுத்த நடவடிக்கை எடுக்கவேண் டும். மேலும், மழைகாலத்தை யொட்டி கால்நடைகளுக்கு கோமரிநோய் தாக்குதல் ஏற்படு கிறது. எனவே கால்நடைகளுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் விவசா யிகள் ஓய்வூதிய திட்டத்தில் இணைய 50 வயது வரை எனும்  விதியை தளர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பதிலளித்து பேசுகை யில், தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்திற்குட்பட்ட  69 ஏரிகள் குடிமராமத்துப் பணிகள் மூலம் தூர்வாரப்பட்டது.  மழை நீர் சேமிப்பு மற்றும்  செறிவூட்டும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள தூர்ந்து போன ஏரிகள், குட்டைகள், கிணறுகள் போன் றவை தூர்வாரப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாந்தன் யோஜனா  திட்டத்தில் 18 வயது முதல் 40வயது வரை உள்ள விவசாயி கள் இத்திட்டத்தில் பதிவு செய்து தங்கள் வயதிற்கு நிர்ண யிக்கப்பட்ட தொகை செலுத்தி வரும் பட்சத்தில் 60 வயதிற்கு மேல் அந்த  விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம்  ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. காய்ந்துபோன தென்னை, பாக்கு மரங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற் கொள் ளப்பட்டுவருகிறது. தக்காளி சாகுபடி சந்தைக்கு போக அதிக விளைச்சல் இருக்கும் பட்சத்தில்  விவசாயிகள் ஒன்று சேர்ந்து குழு அமைத்து தக்காளி ஜாம்,  ஜூஸ்  போன்றவை தயாரிக்கும் தொழிற் சாலை தொடங்க அரசுக்கு பரிந் துரை செய்யப்படும் என ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார்.