இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரு கிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் பகலிரவு ஆட்டமாகக் கொல்கத்தா நகரில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மாவின் (5 விக்.,) மிரட்டலான வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன் னிங்க்ஸை தொடர்ந்து இந்திய அணி தொடக்கத்திலேயே திணறி யது.
தொடக்க வீரர்கள் மயாங் அகர்வால் (14), ரோஹித் சர்மா (21) விரைவாக ஆட்டமிழக்க, அடுத்துக் களமிறங்கிய புஜாரா - கேப்டன் கோலி ஜோடி கொல்கத்தா மைதானத்தில் நங்கூரம் அமைத்து இருவரும் அரை சத மடித்தனர். இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்ட புஜாரா 55 ரன்கள் எடுத்திருந்த பொழுது இபாதத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து கள மிறங்கிய ரஹானாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேச பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது விழித்தனர்.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 173 ரன்களுக்கு 3 விக் கெட்டுகளை இழந்தது. சனியன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி பேட்ஸ் மேன்கள் அதிகம் செலுத்தினர். சூப்பர் பார்மில் அசத்திய ரஹானே (51) அரை சத மடித்து டைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நீண்ட இடை வெளிக்குப் பின்பு ரன் மழை பொழிந்த கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திச் சதமடித்தார். கோலிக்கு இது 27 டெஸ்ட் சதமாகும். மேற்கொண்டு 36 ரன்கள் சேர்த்த கோலி (136) இபாதத் பந்துவீச்சில் வெளியேறினார். ஜடேஜாவும் (12) வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது சீசனில் 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கி றது.
சூதாட்டம் - 3 பேர் கைது
பிங்க் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் கொல்கத்தாவில் சூதாட்டம் நடைபெறு வதாக ஜோரப்கான் நகர காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தயெடுத்து ரோந்து மற்றும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 2 கணினிகள், ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கணினிகள், ஸ்மார்ட்போன்களை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.