ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
கோவை, ஜூன் 22- ஒப்பந்த மற்றும் தினக் கூலி பணியாளர்களை நிரந் தரம் செய்ய வேண்டும், என ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத் தின் (சிஐடியு), 15 ஆவது மகாசபை ஞாயிறன்று, கண பதியிலுள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங் கத்தின் தலைவர் ஜெ.ராஜாக்கனி தலைமை வகித்தார். உதவிச்செயலாளர் டி.ரவிச்சந்தி ரன் வரவேற்றார். குடிநீர் வடிகால் வாரிய கோவை மண்டல பொதுச்செயலாளர் ஆர். சரவணன் துவக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் அறிக்கையை முன்வைத்தார். சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஆர்.வேலுச்சாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பணியிடங்களை தோற்று விக்க வேண்டும். வேலை வாய்ப்பை பறிக் கும் அரசாணைகளை திரும்பப்பெற வேண் டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைவருக்கும் குழு காப்பீடு, விபத்து காப்பீடு ஏற்படுத்தித்தர வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக ஜே. ராஜாக்கனி, பொதுச்செயலாளராக கே. ரத்தினகுமார், பொருளாளராக சி.பார்த்தி பன் உட்பட 13 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் அந்தோணி ராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில், சி. பார்த்திபன் நன்றி கூறினார்.