tamilnadu

img

காகத்திற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காக்கையை தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை சி.பி.ஆர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள "டிரான்ஸ்பார்மரில்" அமர்ந்த காகம் ஒன்று மின்சாரம் பாய்ந்து சாலையில் விழுந்தது. இதை கண்ட தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை, காகத்தை எடுத்து இதயத்துடிப்பை வர வைக்க சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து, அதன் வாயில் காற்றை ஊதினார். இதை தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த காகம் உயிர் பிழைத்தது. பின்னர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிழலில் விடப்பட்ட காகம், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி அங்கிருந்து பறந்து சென்றது. காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளைதுரையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில், பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.