tamilnadu

img

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே  ரூ.481.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அதனைப் பார்வையிட்டார்.

கோவை மாநகரிலிருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் - உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

கடந்த 2018 -இல் துவங்கப்பட்ட பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்து தற்போது நிறைவடைந்து உள்ளது.  இந்த உக்கடம் மேம்பாலத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அப்பாலத்தின் வழியாகச் சென்று அதனைப் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகள் தமிழக அமைச்சர்கள் ,  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,  காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்