விபத்து ஏற்படுத்தும் கேபிள்கள்
கோவை, பிப்.11- மேட்டுப்பாளையம் பிரதான சாலை யில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள கேபிள்களை அப்புறப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை, குருடம்பாளையம் ஊராட் சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் அமைக் கப்பட்டன. இந்த சோலார் விளக்குகள் மற்றும் அதன் கம்பங்கள் கடந்த வாரம் அகற்றப்பட்டன. எனினும் இதில் கட்டப் பட்டிருந்த தனியார் தொலைதொடர்பு கேபிள் அகற்றப்படாததால். சாலை நெடுகிலும் இந்த கேபிள்கள் சிதறி கிடக் கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கேபிள் களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
