கோவையில் இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 43 ஆடுகள் பலியாகின.
கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான 400 ஆடுகளை நாகராஜ், ஆறுமுகம், முத்து ஆகியோருடன் இணைந்து கேரளாவில் இருந்து சூலூர் நோக்கி சாலையில் நேற்றிரவு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது வேலாந்தவாளம் நாச்சிபாளையம் சாலையில் வழுக்கல் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக கோவை சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 43 ஆடுகள் லாரியின் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 15 ஆடுகள் படுகாயமடைந்தது. இதில் ஆடுகளை ஓட்டிவந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை.
இதுதொடர்பாக தகவலறிந்து வந்த க.க. சாவடி போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.