tamilnadu

அவிநாசி முக்கிய செய்திகள்

சேவூரில் ரூ.30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் 

அவிநாசி, அக்.9 -  சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும்  திங்கள்கிழமை  நிலக்கடலை ஏலம்  நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு விடுமுறையால் ஏலம் நடைபெறவில்லை. திங்கட்கிழமைக்கு மாற்றாக புதன்கிழமை ஏலம் நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.30 லட்சத் திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடை பெற்ற ஏலத்தில் 1600 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,180 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,890 வரை யிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ, 6,100 முதல் ரூ.6,240 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 24 வியாபாரிகள், 122 விவசாயிகள் பங்கேற்றனர். 

பூட்டிய வீட்டில் கார், வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

அவிநாசி, அக்.9- அவிநாசி, பாரதி நகரில் பூட்டிய வீட்டில் இருந்து கார், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப்பணம் ஆகிய வற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.  அவிநாசி வள்ளுவர் வீதி, பாரதிநகரைச் சேர்ந் தவர் முருகேசன் (55). இவர் கடந்த 4ஆம் தேதி யன்று வீட்டைப் பூட்டி விட்டு, திருப்பூருக்கு  சென்றுள்ளார்.  பின்னர் செவ்வாயன்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை  உடைத்து ரொக்கப்பணம், வெள்ளிப் பொருள்கள் மற்றும்  வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த கார் ஆகிய வற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.  இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாவை ஒற்றுமையாக நடத்த வட்டாட்சியர் உத்தரவு 

அவிநாசி, அக்.9- அவிநாசி அருகே வடுக பாளையத்தில் கோவில்  திருவிழாவை ஒற்றுமையாக நடத்த இருதரப்பி னருக்கும் வட்டாட்சியர் உத்திரவிட்டுள்ளார்.  அவிநாசி அருகே வடுகபாளையம் காலனியில் அண்ணமார், பெருமாள், பட்டத்தரசி அம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த இருபது ஆண்டு களுக்கு மேலாக ராமசாமி, சுப்பிரமணியன், பெருமாள், சின்னச்சாமி, ஆகியோர் முன்னின்று கோவில் வரவு செலவுகளை செய்து வந்தனர். இந் நிலையில் மாகாளி என்பவர் கோவில் விழா நடத்து வேன் என்று கடந்த 2015ஆம் ஆண்டு வரவு செலவு  பார்த்தபோதுஇருதரப்பினருக்கும் மோதல் ஏற் பட்டுள்ளது.  இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.  இந்நிலையில், திருவிழா ஏற்பாடு தொடர் பாக சேவூர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப் பட்டது. இதையடுத்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 2 தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் விழா கமிட்டி அமைக்க மாகாளி மறுத்துவிட்டார். வட்டாட்சியர் இரு தரப்பினரையும் ஒன்றுசேர்ந்து விழா நடத் துங்கள் இல்லாவிட்டால் விழா நடத்தக்கூடாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் வெள்ளியன்று மீண்டும் மாகாளி தன்னிச்சையாக விழா ஏற்பாடு செய்து  வருகின்றார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், சேவூர்  காவல் நிலையத்தில் நடத்திய பேச்சு வார்த்தையிலும்  கமிட்டி அமைக்க மறுத்துவிட்டு ஒருவரை விழா  நடத்துவேன் என்று கூறுகின்றார். எல்லோரும்  என்னிடம் தான் கோவில் விழாவுக்கு வரி கொடுக்க  வேண்டும். எந்தக் கணக்கும் கேட்கக் கூடாது என்று  மிரட்டுகிறார், அடியாட்களை ஏவி விடுகின்றார். எனவே தனி ஒருவர் விழா நடத்த அனுமதிக்காமல் விழா கமிட்டி அமைத்து தருமாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து புதனன்று வட்டாட்சியர் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில்  21 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து  கோவில் கமிட்டி அமைத்து பட்டியல் கொடுக்குமாறு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.