tamilnadu

திருப்பூர் , அவிநாசி முக்கிய செய்திகள்

இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

திருப்பூர், செப். 6- சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இல வச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. சமூக நலத்துறையின் மூலம்  ஆதரவற்றவர், கண வனால்  கைவிடப்பட்டவர், விதவை மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20ம் ஆண் டிற்கான இலவச தையல் இயந்திரம் பெற விரும்பு வோர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு  மிகாமலும், 20 வயது முதல் 40 வயதிற்குள் (பள்ளி மாற்றுச் சான்றின்படி),  6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் பயனாளியின்  பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் செப்.20க்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சாலை விபத்தில் முதியவர் சாவு

அவிநாசி, செப். 6- அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்தார். அவிநாசி வட்டம், சேவூர் அருகே தாளக்கரை பன் னாங்காடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ராம சாமி(74). இவர் வியாழனன்று காலை தாளக்கரை யில் இருந்து தண்டுக்காரம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தண்டுக்காரம்பாளையம் அருகே வரும் போது, எதிரே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னன் மகன் பழனி சாமி(55) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாக னம் ராமசாமியின் வாகனத்தின் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.