திருப்பூர், ஆக. 11 – திருப்பூர் மாநகரின் வடக்குப் பகுதியில் மக்கள் நெருக்கமான வார்டுகளில் தேங்கிக் கிடக்கும் அடிப்படைப் பிரச்சனைகளில் மாநகராட்சி நிர்வாகத்தைத் தட்டி எழுப்பி நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. திருப்பூர் மாநகராட்சி 26, 27, 28 மற்றும் 29ஆவது வார்டுகள் மற்றும் பழைய 10ஆவது வார்டு பகுதிகளில் சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணி சீராக நடைபெறா மல் கழிவுநீர் குட்டை போல் தேங்கியிருக்கிறது. குப்பைகள் தொடர்ச்சியாக அகற்றப்படாமல் மலை போல் தேங்கி இருக்கிறது. குடிநீர் விநியோகமும் முறையாக நடைபெறாமல் மக்களுக்குப் போதிய குடிநீர் கிடைக்காத நிலை தொடர்கிறது. இத்துடன் நியாய விலைக் கடைகளிலும் மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மாதந்தோறும் வழங்கப்படுவதில்லை என்ற அவலம் தொடர்கிறது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழு சார்பில் ஞாயிறன்று மக்கள் சந்திப்புப் பிரச்சார இயக்கம் நடைபெற் றன. ஓடக்காடு பகுதியில் இந்த பிரச்சார இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் தொடங்கி வைத்தார். கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் கே.நாகராஜ் தலை மையில் தொடங்கிய பிரச்சார பயணக்குழு காலேஜ்ரோடு, கொங்கணகிரி, சரளைக்காடு, சாரதா நகர், கேஜி லே அவுட், ராஜீவ் நகர், எம்ஜிஆர் நகர், சாமுண்டிபுரம் மெயின் ரோடு, வ.உ.சி.நகர் வழியாக முருங்கப் பாளையத்தில் நிறைவடைந்தது. இதில் கட்சியின் மாநகரக் குழுச் செயலாளர் பி.முருகே சன், மாநகரக்குழு உறுப்பினர்கள் டி.சம்பத், ராம் ஆனந்த், முருங்கப் பாளையம் பி.குமார் ஆகியோர் மாநகராட்சியின் அவலங்களைச் சுட்டிக் காட்டி உரையாற்றினர். கிளைச் செயலாளர்கள் துரைசாமி, தனபால், பாலசுப் பிரமணியம், தங்கராஜ், முரு கேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சபுரோ எம்.ரங்க சாமி, என்.குணசேகரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.