திருப்பூர் அறிவியல் இயக்கத்தினர் தகவல்
திருப்பூர், டிச. 18 – டிசம்பர் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகணம், திருப்பூர் மாவட்டம் அவிநா சியில் முழு சூரிய கிரகணம் தெரி யும், அதை உரிய பாதுகாப்பு ஏற்பாட்டு டன் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்த னர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநில கருத்தாளர் உமாசங்கர், அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சூரிய கிரகணத் திரு விழா ஒருங்கிணைப்பாளருமான ஆ. ஈசுவரன் ஆகியோர் புதனன்று திருப் பூர் மாவட்ட செய்தியாளர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: சூரிய கிரகணம் பற்றி இந்தியாவில் மட்டுமின்றி உல கின் பல்வேறு நாடுகளிலும் பொது வாக மூட நம்பிக்கை இருக்கிறது. இந்தி யாவில் பாம்பு சூரியனை விழுங்கு வதாக சொல்வதைப் போல், சீனா வில் டிராகன் சூரியனை விழுங்கு கிறது என்ற மூட நம்பிக்கை இருக்கி றது. பர்மாவில் (மியான்மர்) தவளை சூரியனை விழுங்குவதாக நம்புகின்ற னர். அதேபோல் சூரிய கிரகணத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்ப டும், அதை யாரும் பார்க்கக் கூடாது, மூல நட்சத்திரம் இருப்போர் பரிகா ரம் செய்ய வேண்டும் என்பது போல் பல தவறான கருத்துகள் நிலவுகின் றன. ஆனால் இவை எதுவும் உண்மை யில்லை. சூரிய கிரகணம் என்பது இயற்கையில் நிகழும் அற்புதமான நிகழ்வு. இதை உரிய பாதுகாப்பு ஏற் பாட்டுடன் அனைவரும் பார்க்கலாம். வெறும் கண்களால் அதைப் பார்க்கக் கூடாது.
அற்புத வானியல் நிகழ்வு
டிசம்பர் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் ஏற்படும். அன்று காலை 8 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11 மணி வரை இந்த கிரகணம் ஏற்படும். இதில் சரியாக 9.27 மணி முதல் 9.30 மணி வரை 3 நிமிடங்கள் சூரியன் முழுமை யாக மறைக்கப்படும் வளைய கிரக ணம் இருக்கும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த சூரிய கிரகணம் தெரியும். 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்ப டும் இந்த வளைய சூரிய கிரகணம் இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு ஏற்பட் டது. அப்போது கன்னியாகுமரி மாவட் டத்தில் இந்த முழு கிரகணத்தை காண முடிந்தது. அதே சமயம் சூரிய கிரக ணம் ஏற்படத் தொடங்குவதில் இருந்து வளைய கிரகணம் ஏற்பட்டு மீண்டும் கிரகணம் விலகுவது வரை முழுமை யாகக் காணக்கூடிய நிலை அவிநாசி யில் தெரியும். இதே போன்ற கிரக ணம் அவிநாசி பகுதியில் மீண்டும் ஏற்ப டுவதற்கு 360 ஆண்டுகள் ஆகும். பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவு பூமிக்கும், நிலாவுக்கும் இடையிலான தொலைவைப் போல் 400 மடங்கு அதிகம். பூமிக்கும், சூரிய னுக்கும் இடையில் சரியான நேர்கோட் டில் நிலா வரும்போது இந்த கிர கணம் ஏற்படுகிறது. பூமிக்கு அருகில் நிலா அமைந்திருப்பதால் இந்த கிரக ணத்தின்போது சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு வளைய கிரகணம் நமக்குத் தெரியும்.
பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள்
இந்த சூரிய கிரகணத்தைக் காண்ப தற்கு தமிழ்நாடு அறிவியல் இயக் கம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள் ளது. இதைக் காண்பதற்கு சூரிய கண் ணாடி மற்றும் புத்தகம் ஒன்று ரூ.20 விலைக்கு அறிவியல் இயக்கம் வழங்கு கிறது. இதற்காக 25 ஆயிரம் சூரிய கண்ணாடிகள் பள்ளி மாணவர்களுக் கும், பொது மக்களுக்கும் வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரச் சார், அறிவியல் பலகை, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, தமிழ் நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இந்திய வானியல் சங்கம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இந்த அரிய நிகழ்வை காண்பதற்கு அவி நாசி டீ பப்ளிக் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிற மாநில குழந்தைகள் 50 பேர் கலந்து கொள்கின்றனர். அதேபோல் பல்லடம் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வான வியல் குழந்தைகள் திருவிழா நடைபெ றுகிறது. அங்கு சூரிய கிரக ணத்தைக் காண தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 50 குழந்தை கள் பங்கேற்கின்றனர். இது தவிர திருப் பூர் வித்யாமந்திர் பள்ளி, திருப்பூர் மாந கராட்சி அருகில் கே.ஆர்.சி. சிட்டி சென் டர், திருநீலகண்டபுரம் அமுதா நர்சரி பள்ளி, அவிநாசி பழைய பஸ் நிலை யம் அருகில், பெருமாநல்லூர் விக் னேஷ்வரா மெட்ரிக் பள்ளி மற்றும் உடு மலை, காங்கேயம், மூலனூர், தாரா புரம் ஆகிய பகுதிகளில் சூரிய கிரக ணத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சூரிய கதிர்வீச்சை வடிகட்டி சூரிய னின் வடிவத்தைக் காணக்கூடிய கண் ணாடியில் பார்த்தாலும் 30, 40 விநாடி களுக்கு மேல் தொடர்ந்து பார்க்கக் கூடாது, விட்டுவிட்டுத்தான் பார்க்க வேண்டும். சூரிய கண்ணாடிகள் தவிர 14ஆம் எண் வெல்டிங் கண்ணாடி மூல மும் சூரிய கிரகணத்தைப் பார்க்க லாம். இந்த கிரகணத்தைக் காண்பதற் கான கண்ணாடிகள் திருப்பூர் மேட்டுப் பாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் அறிவியல் வள மையம், மங்கலம் சாலை கிட்ஸ் ஜீ மழலையர் பள்ளி, அவி நாசி சாலை பின்னல் புத்தக நிலையம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் மேஜிக் ஸ்டோர் ஆகிய இடங்களில் கிடைக்கும் என்று தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது சூரிய கிர கணத் திருவிழா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அப்துல் ஜலீல், அறி வியல் இயக்க மாநில நிர்வாகி வி.ராம மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.