tamilnadu

img

ரயிலிலிருந்து தவறி விழ முயன்ற பயணியை காப்பாற்றிய காவலர்

கோவை, அக்.26- கோவை ரயில் நிலையத்தில் ரயில்  படிகட்டில்  இருந்து தவறி விழ முயன்ற பய ணியை ரயில்வே காவல்துறையினர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி யுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில்  சனியன்று காலை கிளம்பியது. அப்போது  ஓடும் ரயிலில் பயணி ஒருவர் ஓடி வந்து ஏறினார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஜெயன் என்பவர் சம யோசிதமாக செயல்பட்டு கீழே தவறி விழ  இருந்த பயணியை காப்பாற்றி ரயிலில் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அங்கி ருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. ரயில் பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர் ஜெயனுக்கு தெற்கு  ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே காவல் துறையினரும் பாராட்டு தெரிவித்தனர்.