கோவை, மே 26–பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்கத்தின் கோவைப்பகுதி வைரவிழா பொது மாநாடுமசக்காளிபாளையம் ஹர்சா மாஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு எம்.கஜேந்திரன் தலைமை தாங்கினார். அகில இந்திய இன்சூரன்ஸ்ஊழியர் சங்கத்தின் தலைவர்அமானுல்லாகான் மாநாட்டைதுவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டின் முக்கித்துவம் மற்றும் இன்றைய அரசியல் சூழல் குறித்து அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துணை தலைவர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர் வி.சுரேஷ், உதவி பொருளாளர் வி.ஜானகிராமன் கோவைப்பகுதி பொதுச்செயலாளர் துளசிதரன் ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.மதக் கலவரங்களை தூண்ட முயற்சிக்கும் மதவெறி அமைப்புகளை தனிமைப் படுத்தவேண்டும். கருத்துரிமைகளை மறுதலிக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்தும், தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட கூட்டு பேர உரிமையை திரும்ப அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதானஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும். பிரீமியத்திற்கு பிரத்தியேகமான வரிச்சலுகை அளிக்கவேண்டும். பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
முன்னதாக சனியன்று நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக எம்.கஜேந்திரன், பொதுச்செயலாளராக கே.துளசிதரன், பொருளாளராக கே.மணிகண்டன் மற்றும் இணைச் செயலாளராக டி.தில்லைகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வைர விழா பொது மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.