tamilnadu

img

டவர் லைனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மாமரங்கள் பாதிப்பு

ஈரோடு, ஜூன் 21- விவசாய நிலம் வழியாக செல்லும் டவர் லைனில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால், தோட்டத்தில் உள்ள மாங்காய் உருமாறுவதாக ஈரோடு வேளாண் குறை தீர் கூட்டத்தில் விவசாயி புகார் தெரிவித் தார். ஈரோட்டில் வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாவட்ட ஆட்சியர்  சி.கதிரவன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னிமலை பகுதி மூனாம்பள்ளியை  சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர்  தான் கொண்டு வந்திருந்த உருமாறிய  மாங்காய்களுடன் புகார் அளித்தார். அப் போது அவர் கூறுகையில், ஈரோடு மாவட் டம், சென்னிமலை அருகே மூனாம்பள்ளி யில் எனக்கு 8 ஏக்கர் விவசாய நிலம் உள் ளது. இதில், நான்கு ஏக்கரில் மாங்காய் தோட்டம் அமைத்துள்ளேன். மாங்காய் தோட்டத்தின் வழியாக கடந்த 2015 ஆம்  ஆண்டு மின்வாரியத்தின் சார்பில் டவர் லைன் அமைக்கப்பட்டது. இந்த டவர் லைன் அமைக்கும் பகுதியில் 82 மாங்காய் மரங்கள் உள்ளதால், மாங்காய் மரத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மின்வாரியத்திடம் முறையிட்டேன். ஆனால், நஷ்ட ஈடு வழங்க முடியாது, மரங் களை அப்படியே விட்டு விடுங்கள் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் மேற்குறிப்பிட்ட டவர் லைனில் இருந்து மின்சாரம் பூமிக்கு வருவதால் டவர் லைனுக்கு கீழ் உள்ள மாமரங்களில் காய்க்கும் மாங்காய் வளர்ச்சி பாதிக்கப்படுவது தெரியவந்தது. குறிப்பாக, மின்காந்த அலைகள் பாய்வ தால் மாமரங்களில் உள்ள மாம்பழங்கள்  உருமாறி சாப்பிட முடியாத அளவுக்கு மாறி வருவது தெரியவருகிறது. எனவே, எனது நிலம் வீணாகி உள்ளதால், தகுந்த நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரி னார். இதற்கு பதிலளித்த மாவட்ட வரு வாய் அலுவலர் கவிதா, இதுகுறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயி கந்தசாமிக்கு உறுதியளித்தார்.