tamilnadu

img

"தருமபுரி வாசிக்கிறது" - பள்ளிகளில் வாசிப்பு நிகழ்ச்சி

தருமபுரி, ஜூலை 15- 2 ஆம் ஆண்டு புத்தகத்திரு விழாவையொட்டி ‘‘தருமபுரி வாசிக்கிறது’’ என்ற நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி துவக்கி வைத்தார். தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம், பள்ளிக்கல்வித் துறையும்  இணைந்து வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை தருமபுரி யில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவையொட்டி திங்களன்று மாவட்டம் முழுவதும் “தருமபுரி வாசிக்கிறது” என்ற சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக, இலக் கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வாசிப்பு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி  தொடங்கி வைத்தார். பின் னர் அவர் பேசியதாவது, வாசிப்பு என்பது கல்வியையும், அறிவை யும் கொடுக்கும். ஒருவர் ஒரு குடும்பத்தில் வாசிப்பு நடத் தினால், அந்த குடும்பமே அதை பார்த்து பின்பற்றும். வாசிப் பினால் சமூகமே அறிவார்ந்த சமூகமாகவும் கல்வியில் முன் னேறிய சமூகமாக மாறும் என்றார்.

மேலும், அவர் கூறுகையில், மாவட்டத்தில் நிலத்தடி நீரை செரிவூட்ட வேண்டும். தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. மாவட்டத்தில் 19 வருவாய் பிர்க்காக்கலிலும் குடிநீர் பற் றாக்குறை உள்ளது. மழை நீரை சேமிக்க வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை பாது காக்க வேண்டும். மழை வருவ தற்கு மரம் வழக்க வேண்டும். மாணவர்கள் மரம் வளர்ப்பில் ஈடுபடவேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமசாமி பேசியதாவது, மாவட்டம் முழு வதும் 1,600 பள்ளிகளில் 2 லட் சத்து 90 ஆயிரம் மாணவ, மாணவி கள் வாசிப்பு நிகழ்ச்சியில் ஈடு பட்டுள்ளனர். மாணவர்கள் வாசிப்பில் ஈடுபட்டால் அறி வார்ந்த சமூகமாக மாறும் என தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் முன்னிலை வகித்தார். புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் டிஎன்சி மணிவண் ணன் வரவேற்புரையாற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் மருத்துவர் இரா.செந்தில்,  புத்தகப்பேரவை நிர்வாகிகள் இரா.சிசுபாலன், சி.இராஜ சேகரன், எம்.கார்த்திகேயன்,  ஆர். கே.கண்ணன், மா.பழனி, வெ. ராஜன், கவிஞர் கே.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் தொடங்கி வைத்தார். தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இ.பி.பெருமாள், சி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தருமபுரி மாவட்டம் முழுவ தும் அனைத்துப் பள்ளி, கல்லூரி களிலும் நடைபெற்ற சிறப்பு வாசிப்பு இயக்கத்தில் 3 லட் சம் மாணவ, மாணவியர் பங்கேற் றுள்ளனர்.