தருமபுரி, ஆக.22- பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பத்திரிக்கை யாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் சிறப்பு ரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் அ.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் கே.மணி (எ) ரங்கமன்னார், மாவட்ட செய லாளர் ஜி.லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட் டத்தில், காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனத்தின் இறுதி நாளன்று நேரடி ஒளிபரப்பில் ஈடு பட்டுக் கொண்டிருந்த ஜெயா டிவி செய்தியாளர் ராஜேஷ், ஒளிப்பதி வாளர் சந்துரு ஆகியோரை கண் மூடித்தனமாக தாக்கிய காவல் துறை ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் மற்றும் காவல்துறை யினர் செயலை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக் குள்ளான செய்தியாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நஷ்டஈடு வழங்க வேண்டும். தாக்கு தலில் உடைக்கப்பட்ட கேமரா வுக்கு பதிலாக புதிய கேமராவை வாங்கி தர வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள செய்தியாளர் களுக்கு அரசு அடையாள அட்டை யும், இலவச பேருந்து பயண அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா ஆகியவற்றை வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஆவணம் செய்ய வேண்டும்.
மேலும், பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய தொகையை ரூ.15 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் செய்தியாளர்களின் பணி மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலன்களை காக்கவும், பத்திரிகை யாளர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழைகளின் குழந்தைகளுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டில் பத்திரிகை யாளர்களின் குழந்தைகளுக்கு 5 சதவிகித ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் பத்திரிகையாளர் களுக்கு தனியே வீட்டு வசதி திட்டத்தின் படி வீடுகள் வழங்கி வருகிறது. இதேபோல் தமிழ கத்திலும் வழங்கப்பட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.