அவிநாசி, ஜூலை 28- அவிநாசி பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணியின் போது, விநியோகம் செய்யப் படாத பழைய கடிதங்கள் இடுபாடுகளில் சீக்கி உள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுவ தற்காக, பேருந்து நிலையம் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவிநாசியில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் சனியன்று அவிநாசி பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இடிபாடுகளுக்கு இடையே ஒரு பாலித்தீன் கவரில் கடிதங்கள் கிடப் பதை கண்டுள்ளார். அதனை பிரித்து பார்த்த போது கடந்த 2015ஆம் ஆண்டு செப்.14 மற்றும் 15ம் தேதி முத்திரையிடப் பட்ட தபால்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதங்களில் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் மற் றும் சில புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடிதங்கள் இருந்தன. இதுகுறித்து, அவிநாசி தபால் நிலைய அதிகாரி கலைசெல்வியிடம் கேட்ட போது, அவிநாசி தபால் நிலையம் உட்பட 13 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு கடிதங்கள் சரியான முறையில் பொது மக்களுக்கு பட்டுவாடா செய்யப்படு கின்றன. இதுவரை புகாருக்கு இடமளிக் காத வகையில், தபால் சேவை வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் நான் காண்டுக்கு முந்தைய தேதியிட்ட கடிதங்கள் கீழே இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை செய்து நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.