tamilnadu

img

கற்பக விருட்சத்தைக் காப்பாற்றிடுக

பெத்த பிள்ளை காப்பாற்றா விட்டாலும், வெச்ச பிள்ளை காப்பாற்றும், பிள்ளையைப் பெத்தா கண்ணீரு, தென் னைய வெச்சா இளநீரு என்பார்கள். தென்னையின் அனைத்து பொருள்க ளும் பயன்மிக்கதாக இருப்பதால் இவ் வாறு பாடல் பிறந்தது. இப்படிப்பட்ட தென்னை இந்தியாவில் 19 மாநிலங்களில் சாகுபடி செய்கின்றனர். இதில் தென் மாநி லங்களாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் சுமார் 10 லட்சம் எக்டேருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தென்னையிலிருந்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து ஏற்று மதி செய்யப்படுகிறது. அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் நிலையில் 1981ல்  தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை  நார் வாரியம் ஆகியவை தொடங்கப் பட்டது. இவை விவசாயிகளுக்கு பெரும் உதவிகளை செய்து வந்தது.  தென்னையிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் பயன்படும் நிலையில் அதனை 800க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. ஆனால் புதிய தாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் பூச்சி தென்னையைத் தாக்கி வருகிறது. இது முதலில் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா வில் கண்டறியப்பட்டது. இந்தியாவில், பொள்ளாச்சியில் 2016ல் இதன் தாக்கம் தெரிய வந்தது.  இந்த சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை மரங்களின் இலைகளில் தங்கி சாறு உறிஞ்சி விடுகிறது. தேன் போன்ற திரவத்தை வெளியேற்றுகிறது. இத்திர வம் இலைகளில் பரவுகிறது. இதனால் இலைகள் மீது கரும்பூசன் வளர்ந்து, தென்னை நார்கள் கருப்பு நிறமாக மாறி விடுகிறது. எனவே, ஒளிச்சேர்க்கை பாதிக் கப்பட்டு தென்னை மரத்தின் வளர்ச்சி குன்றி மெல்ல காய்ப்பு இழந்து விடுகி றது. இதில் வீரிய ஒட்டு ரகங்கள் முழுமை யாகக் கருகிக் காய்ந்து விடும் நிலை உள் ளது.  இந்நிலையில், தமிழக அரசின் வேளாண் துறையும், அரசு வேளாண்மை பல்கலைக்கழகமும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து இதுநாள் வரை வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த தெரிவித்த எல்லாவிதமான நோய் கட் டுப்பாட்டு பரிந்துறைகளும் பயனில்லா மல் போய்விட்டது. மாறாக, சுருள் வெள்ளை ஈக்கள் கடந்த நான்கு ஆண்டு களில் பல்கிப் பெருகிவிட்டன. மேலும் மாற்று உணவுப் பயிர்களான கொய்யா, கொக்கோ, எலுமிச்சை, சப் போட்டா, வாழை, பலா போன்ற பழ வகை பயிர்களையும், காய்கறி பயிர்களான வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி, வெங்காயம் மற்றும் சிறு தானியங்களான மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களில் பரவி விவசாயிகளுக்கு நட் டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈக்கள் 140 வகையான தாவரங்களைத் தாக்கி சேதப்படுத்துவதாக வேளாண் விஞ்ஞா னிகள் தெரிவிக்கின்றனர்.  இது அனைத்து மாநிலங்களில் இருந்தாலும், கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலும், திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டையிலும் மிக அதிக மாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தென்னை மரங்கள் வளர்ந்துள்ளதால் தனிப்பட்ட விவசாயிகள் மருந்துகள் தெளிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் பயனில்லை.  எனவே, மத்திய அரசு தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை மரங்களை காப்பாற்றுவதற்கு விமானம் மூலம் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். காய்ந்துள்ள மரங்களுக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மற்ற பயிர்களுக்கும் உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.