tamilnadu

img

அவிநாசியில் ரத்ததான முகாம்

அவிநாசி, ஜூன் 2அவிநாசியில்,  உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது.அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் சிகரங்கள் அறக்கட்டளை இணைந்து ரத்ததான முகாம் நடத்தின.  இம்முகாம் அவிநாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இம்முகாமை டாக்டர் பாலாஜி தலைமையிலான மருத்துவக்குழுவினர், ரத்தக் கொடையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தம் சேகரித்தனர். மேலும் 60 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.இந்நிலையில்,  30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரத்த தானம் செய்ய தயக்கம் காட்டும் நிலையில், இம்முகாமில் இரு குடும்ப பெண்கள் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிகரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்திருந்தனர்.