சேலம், ஜூன் 27- ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி ரயில்வே ஊழி யர்கள் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்த்தில் ஈடுபட்டனர். மத்தியில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும். குறிப்பாக ரயில்வே துறையை தனியார் மயமாக்க பல்வேறு பணிகளை மத்திய பாஜக மோடி அரசு செயல் படுத்தி வருகிறது. லாபகரமாக இயங்கி வரும் ரயில்வே துறையை தனியார்மயமாக்க துடிக்கும் மத் திய பாஜக அரசை கண்டித்து தமி ழகம் முழுவதும் ரயில்வே பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக சேலம் ஜங்சன் பகுதியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று தட்சின ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களின் வரிப்பணத்தில் உருவான ரயில்வே பொதுத்துறையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். படித்த இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு தரும் ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. முதியோர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப் படும் சலுகைகளை ரத்து செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் எஸ்.திருப்பதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணை பொது செயலாளர் சி.முரு கேசன், கோட்ட செயலாளர் கே. அல்லிமுத்து, பொருளாளர் எம்.முருகேசன் உள்ளிட்ட ரயில்வே பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.