கோவை, மார்ச் 8- பார்வையற்றோருருக்கான பள்ளியில் மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்றோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 18 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணவி 4ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இந்த மாண விக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த செவ்வாயன்று மாணவியின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோ தித்த மருத்துவர்கள், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொத்தரவு அளித்த காரணத்தால் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர். எனவே, மகளிடம் தவறுதலாக நடந்து கொண்ட ஆசிரியர் யார் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து இந்த பள்ளியில் ஆசிரிய ராக பணியாற்றி வரும் ஒருவரிடம் காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.