tamilnadu

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆட்சியரிடம் மனு

ஈரோடு, செப். 9- வெள்ளோடு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், வெள்ளோடு, கொம்பனை 4 ஆவது வார்டு பகுதியில் உள்ள தென்முகம் மற்றும் வடமுகம் ஆகிய பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியிலுள்ள ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால், நிலத்தடி நீர் குறைந்து ஆழ்துளை கிணறுகள் முழு மையாக வற்றிப்போய் உள்ளது. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இந்நிலையில், இப் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். பாது காக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட  ஆட்சி யரிடம் திங்களன்று மனு அளித்தனர்.