tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காந்திநகர் கிளையின் சார்பில் மனு

கோவை மாநகராட்சி 42 ஆவது வாட்டு காந்திநகர் அருகில் அம்மன்நகரில் தார்சாலை அமைக்கவும், குடிநீரை சீராக  விநியோகிக்க வலியுறுத்தி வடக்கு மண்டல துணை ஆணையரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காந்திநகர் கிளையின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, கிளை செயலாளர் துரைசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர்.