மேட்டுப்பாளையம், பிப். 16- கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் மத்திய அரசு அமல்படுத்தி யுள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்திற்கு எதிராக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங் கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை, மேட்டுப்பா ளையத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், அனைத்து இஸ்லா மிய அமைப்புகள் மற்றும் திமுக, காங்கி ரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக உள்ளிட்ட அர சியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங் கேற்றனர். இப்பேரணியானது, மேட்டுப்பாளையம் - கோவை நெடுஞ் சாலையில் உள்ள கோஆப்ரட்டிவ் காலனியில் துவங்கி பேருந்து நிலை யம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. குடியு ரிமை சட்டத்திற்கு எதிராக சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்ட பேரணியை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில், நீண்ட தேசிய கொடியுடன் பேரணியில் பங்கேற்றவர்கள் நாட் டின் ஒற்றுமையை குலைக்கும் வகை யில் கொண்டு வரப்பட்டுள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை மத் திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.