கோவை, மார்ச் 12 – கோவை ஆனைகட்டி பகுதியில் கைது செய்யப் பட்ட மாவோயிஸ்ட், கோவை நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜர்படுத் தப்பட்டு 15 நாட்கள் நீதி மன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்டம், ஆனைக்கட்டி பகுதியில் புத னன்று காலை அரசு பேருந் தில் பயணம் செய்த மாவோ யிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் என கருதப் படும் சோபா என்கிற சவிதா என்பவர் கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப் பட்டார். இதையடுத்து விசாரணைக்காக அவரை ஈரோடு மாவட்டத்திற்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர். விசா ரணைக்கு பின்னர் பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப் பட்ட சோபா (எ) சவிதா மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்பின் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட் டார். மேலும், இவர் கர்நாடகா மாநிலம் சிருங்கேரி பகுதியை சேர்ந்தவர் எனவும், இவர் மீது கர்நாடகா மற்றும் கேரளா மாநி லங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதா கவும் கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.