tamilnadu

img

உழைக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுக

சிஐடியு உழைக்கும் பெண்கள் மறியல் - கைது
 

 கோவை, மார்ச் 6 –  பெண்களுக்கு அநீதியை இழைக்காதே, சமவேலைக்கு சம  ஊதியம் வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து அனை வரும் கைது செய்யப்பட்டனர்.  உழைக்கும் பெண்களின் பாது காப்பை உறுதி செய்திட வேண் டும். 33 சதவிகித இடஒதுக்கீட்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று. சம வேலைக்கு சம  ஊதியம் வழங்கிட வேண்டும். அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்திட  வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழுவினர் நாடு  முழுவதும் மறியல் போராட்டத் தில் ஈடுபட சிஐடியு அகில இந்திய  மாநாடு அழைப்பு விடுத்திருந்தது.  இதன்ஒருபகுதியாக வெள்ளி யன்று கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஏராள மான உழைக்கும் பெண்கள் திரண் டனர். இப்போராட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழுவின் அமைப்பா ளர் லலிதாமணி தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலா ளர் எம்.சந்திரன் போராட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார். இதில் சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் ஆர்.வேலுசாமி உள்ளிட் டோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர். 

இதனைத்தொடர்ந்து கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடு பட்டதாக அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோட்டில் சிஐடியு உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் துணைச்  செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட துணைச் செய லாளர் சி.ஜோதிமணி மற்றும்  சிஐடியு துணைத் தலைவர்  ஆர்.ரகுராமன் ஆகியோர் கலந்து  கொண்டு கண்டன உரையாற்றி னர். இதில், திரளான பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு  கண்டன முழக்கங்களை எழுப்பி னர்.