தாராபுரம், நவ. 30 - தாராபுரத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 118 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக மற்றும் நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தாராபுரம் என்சிபி நக ராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் தாராபுரம், திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த ஆயில் கம்பெனி, பனியன் உற்பத்தி, தனியார் மருத்துவ மனை, காப்பீடு, இன்ஜினியரிங் துறை உள்ளிட்ட 28 நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் 18 வயது முதல் 40 வயது வரையிலான 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நேர்கா ணல் நடத்தப்பட்டு உரிய ஆவணங்களுடன் வந்தி ருந்த 118 பேருக்கு வேலைக்கான உத்தரவு அப் போதே வழங்கப்பட்டது. மேலும் தேர்வு செய்யப் பட்டு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதவர் களுக்கு உரிய ஆவணங்களுடன் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.