tamilnadu

img

சின்னார்பதி பழங்குடியின குடியிருப்பில் பள்ளிக்கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சி, செப்.20- பொள்ளாச்சி அடுத்த ஆழியார்  அருகே உள்ள சின்னார்பதி அரசு  தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்ட பழங் குடியின வன கிராமத்தில் இடம்  ஒதுக்கீடு செய்து கோவை மாவட்ட  ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவு பிறப் பித்தார்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே அமைந் துள்ள வன கிராமமான சின்னார்பதி அருகில் உள்ள மின் வாரிய குடியி ருப்பு கட்டிடத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது.  இப்பள்ளியில் 70 க்கு மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  மிகவும் சிறிய  அளவில் இக்கட்டிடம் அமைந்துள்ள தால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி  வந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வருவாய் துறை யினரால் நில அளவை செய்யப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டது.  ஆனால் இன்ற ளவும் கல்வித் துறை வசம் நிலம் ஒப்ப டைக்கப்படாமல்  இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட  ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் வால்பாறை பகுதியில் குறைதீர் கூட்டமானது புதனன்று நடை பெற்றது.  இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.   இம்மனுவினை பெற்றுக்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி கூறுகையில், ஆழியார் அடுத்த  சின்னார்பதி மலைவாழ் பழங்குடியின  மாணவர்களுக்காக ஆழியார் பகுதியில் 50 சென்ட் நிலம் ஏற்கனவே வரு வாய்த் துறையினரால் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதே பழைய  இடத்தில் பொள்ளாச்சி  ஆழியார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டுவதற்காக உத்தரவு பிறப்பித்தார்.  இதனை யடுத்து அதே இடத்தில், வருவாய்த் துறையினர் தரப்பில் நில அளவையர்   கற்கள் பதித்தனர். மேலும் சம்பந்தப் பட்ட இடத்தில் கிராம நிர்வாக அலு வலரும்  ஆய்வு  செய்தனர் என்றார். இச்செயலானது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக பழங்குடி யின மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ். பரமசிவம் தெரி வித்துள்ளார்.