tamilnadu

img

ராவணபாளையம் ஊராட்சிக்கு மத்திய அரசு விருது

திருப்பூர், அக். 29- மத்திய அரசின் விருது பெற்ற ராவாணா புரம் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் தேசிய விவசாய அறிவியல் கலை அரங்கில் நடைபெற்ற மத்திய அரசின்  விருதுகள் வழங்கும் விழா கடந்த 23.10.2019 அன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ராவாணாபுரம் ஊராட் சிக்கு மத்திய அரசின் 2017-2018ஆம்  ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது. கிராம மக்கள் பயன்பெறும் வகையில், பொது மக்களின் பங்களிப்பு மற்றும் அனைத்துத் திட்டப்பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டமைக்காக மத்திய  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமன் இவ்விருதினை வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து,  செவ்வாயன்று  மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட  ஆட்சியர்டாக்டர்.க.விஜயகார்த்திகேய னிடம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிர மணியன், ஊராட்சி செயலாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.