tamilnadu

அவிநாசி மற்றும் உடுமலை முக்கிய செய்திகள்

அனுபவ விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்குக

வன உரிமை சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கோரிக்கை

உடுமலை, நவ. 8- அனுபவ விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உரிமை சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வுக் கூட் டத்தில் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடுமலை வட்டத்தில் வன உரிமை சட்டம் 2006ஐ அமல்படுத் துவது குறித்த கோட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். இதில் திருமூர்த் திமலை, குழிப்பட்டி, குறுமலை, ஈசல்திட்டு, பூச்சுக்கொட்டாம் பாறை, மாவடப்பு மற்றும் காட்டுப் பட்டி ஆகிய வனக்குடியிருப்பு பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வன உரிமை சட் டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வன உரிமை சட்டத்தை அமலாக்க கிராம சபை மற்றும் வன உரிமைக்குழு அக்குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டு மலை, கரட்டுபதி, தளிஞ்சிவயல், கருமுட்டி ஆகிய செட்டில்மென்ட் பகுதிகளில் வீட்டிற்கான அனுபவ உரிமை சான்று வழங்கப்பட்டுள் ளது. ஆனால் விவசாய உரிமை வழங்கப்படவில்லை என மலை வாழ் மக்கள் தெரிவித்தனர். மேலும் அனைத்து செட்டில்மென்ட் பகுதி களிலும் சாலை வசதி, குடிமனைப் பட்டா மற்றும் விவசாய நிலப்பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் எனக் கோரினர். 

இதேபோல், வீட்டு உரிமை வழங்கப் பெற்றவர்களுக்கு பசுமை வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். பூச்சுக்கொட்டாம்பாறை செட்டில் மென்ட் பகுதியில் நில அளவை பணி இன்னும் நடைபெறவில்லை. திருமூர்த்திமலை பகுதியில் சாலை அமைக்கக்கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டும் எவ்வித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் குறித்து வனத்துறையினர் கூறுகையில், வீடு மற்றும் அனுபவ நிலத்திற்கு அனுபவ சான்று கொடுத்த பின் னரே சாலை வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து செட்டில்மென்ட் மக்க ளின் கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக, இந்த ஆய்வுக்கூட் டத்தில், உடுமலைப்பேட்டை மற்றும் அமராவதி வனச்சரக அலு வலர்கள், உடுமலை வட்டாட்சியர், பெரியவாளவாடி மற்றும் குறிச்சிக் கோட்டை உள்வட்ட நில வருவாய் அலுவலர்கள், திருமூர்த்திமலை கிராம சபை தலைவர் மணிகண்டன், குருமலை கிராம சபை தலைவர் செல்வன், மேல்குருமலை கிராம சபை தலைவர் சௌந்தரராஜன், குழிப்பட்டி கிராம சபை தலைவர் முருகன், ஈசல்திட்டு கி.ச.தலைவர் மணியன், மாவடப்பு கி.சா.தலை வர் குப்புச்சாமி, காட்டுப்பட்டி கி.சா.தலைவர் பச்சையன், பூச் சுக்கொட்டம்பாறை கி.சா.சின்ன சாமி, கரட்டுபதி கி.சா.தலைவர் மகேஸ்வரி மற்றும் கோட்ட அள விலான உறுப்பினர் தாடகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

 

சாலை விபத்தில் 5 பேர் படுகாயம்

அவிநாசி, நவ. 8- அவிநாசி அருகே பழங் கரை புறவழிச்சாலையில் வியாழனன்று பெங்களூரி லிருந்து குளிர்பானங்களை ஏற்றிக் கொண்டு கொச்சி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு வாகனத்தை முந் திச் செல்ல முயன்றபோது  எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. அதேநேரத்தில், கோவையிலிருந்து ஈரோடு நோக்கி வந்த கார், கவிழ்ந்த லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த பெருந்துறை பகுதியைச் சேர்ந்த பார்த்த சாரதி (36), அவரது மனைவி சுஜிதா(28), இவரது மகள்கள் சனா (8), கீர்த்தனா (9) மற் றும் தனலட்சுமி (54) ஆகி யோர் பலத்த காயமடைந்த னர். அவர்கள் மீட்கப்பட்டு திருப்பூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.