தனியார் கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
நாமக்கல், செப்.17- மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்காமல், நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் பயி லும் எஸ்சி, எஸ்டி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கல்வி நிலை யங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சியை கைவிடக்கோரி அக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத் திரம் அருகே புறவழிச் சாலையில் இயங்கி வரும் ஞானமணி என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல், பயோமெடிக்கல், பிஎட், எம்எட், கேட்டரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படித்து வருகின் றனர். இந்நிலையில், இங்கு பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொ கையை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என கூறப் படுகிறது. இதையடுத்து கல்விக் கான கட்டணத் தொகையை மாண வர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது, மேலும், விடுதி யில் தங்கி படித்து வரும் மாண வர்கள், உடனடியாக விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகி றது. இதனால் இங்கு பயின்று வந்த மாணவர்களின் எதிர்கா லம் கேள்விக்குறியாக மாறியுள்ள துடன், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் திங்களன்று கல்லூ ரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன் புள்ள சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறி யதாவது, எஸ்சி.எஸ்டி மாணவ-மாணவிகளுக்கான மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொ கையை ஒதுக்காத நிலையில், கல்லூரி நிர்வாகம் எங்களை கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யின மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்ற உயர்கல்வி நிலை யங்களில் படிக்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே, மத்திய அரசு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் எங்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண் டும் என வலியுறுத்தினர். இப்போ ராட்டம் காரணமாக அக்கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.