ஈரோடு, ஆக. 26- டாஸ்மாக் கடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால், அக்கடையை அகற்றக்கோரி ஈரோடு, திருநகர் காலனி பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அன்புதம்பி, தி.மு.க., முன்னாள் கவுன் சிலர் ராமசந்திரன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு, திருநகர் காலனி பிரதான சாலையில், கிரசன்ட் மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடை எண்: 3405 செயல் படுகிறது. இக்கடையை சுற்றிலும் பல குடியிருப்புகள் அமைந்துள்ளன. இச்சூழலில் அக்கடைக்கு வரும் மதுப்பிரி யர்கள் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அமர்ந்து மது அருந்துவதும், வாகனங்களை சாலையிலும், வீடு, கடைக ளின் முன்பு நிறுத்தியும் தகராரில் ஈடுபடுகின்றனர். மேலும், பெண்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தை களை ஆபாசமாக பேசுவது, ஆடைகளின்றி சாலையில் படுத்திருப்பது, கடை, வீடுகளில் உள்ளவர்களை மிரட்டு வது, விபத்தை ஏற்படுத்துவது என பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதா ரம் முற்றிலும்பாதிக்கிறது. எனவே, இக்கடையை அகற்ற வேண்டும். அல்லது போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.