tamilnadu

பிரதமர் - சீன ஜனாதிபதியை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி மக்களை பாதிக்காத வகையில் வைக்க அறிவுறுத்தல்

சென்னை, அக்.3-  மாமல்லபுரத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதியை ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர்  வைப்பதற்கு உயர்நீதிமன்றம்  அனுமதி யளித்துள்ளது.  மக்களை பாதிக்காத வகையில் வைக்க வேண்டும். விதிகளை பின்பற்ற வேண்டியது  கடமை என்றும்  அறிவுறுத்தி யுள்ளது. சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து சட்டவிரோத பேனர்கள் வைப்பதை  சென்னை உயர்நீதி மன்றம் கண்டித்தது. இனிமேல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கமாட்டோம் என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாமல்லபுரத்திற்கு நடை பெறுகின்ற பேச்சுவார்த்தைக்காக வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை  வரவேற்று பேனர் வைக்க, மத்திய-மாநில அரசுகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 இடங்களில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனு மதிக்க வேண்டுமென மனுவில் கோரப் பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாரா யணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  விதிமீறல் பேனர் வழக்கில் அக்டோபர் 1 ஆம் தேதி அரசு தாக்கல் செய்த உத்தர வாதத்தை மீறியோ, பொதுமக்களுக்கு இடையூறாகவோ பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும்  மாமல்ல புரம் வரும் மோடி, ஜின்பிங்கை வரவேற்க பேனர்கள் வைக்கப்போவதாகவும் அதில் எவ்வித விதிமீறலும் இருக்காது என்றும்  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.  பேனர் வைக்ககூடாது என்ற உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இதன்படி எந்த அரசியல் கட்சியும் பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.  தில்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுகிறதா என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்படி எந்த  பேனரும் வைக்கப்படுவதில்லை என்று திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் தெரி வித்தார். தில்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படு வது வழக்கம்தான் என்றும், விமான நிலை யத்தில் வைக்க அனுமதிக்கப்படுவதாகவும் டிஜிட்டல் பேனர் அச்சகங்கள் தரப்பு வழக்க றிஞர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.  இதையடுத்து, மத்திய-மாநில அரசு கள் பேனர் வைக்க முடிவெடுத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டி யது அவர்களின் கடமை என்றும்  பொதுமக்க ளுக்கு இடையூறாக பேனர் வைக்கமாட் டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. விதிமீறல் பேனர் வைக்க மாட்டோம் என கடந்த டிசம்பர் உத்தரவாதம் தாக்கல் செய்ய சொன்னது அரசியல் கட்சிகளை மட்டும்தான் என்றும் நீதிபதிகள் கூறினர். பேனர்கள் வைக்கும்போது உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சட்டத்தின் 21-வது  பிரிவு வழங்கியுள்ள குடிமக்களின் தனி மனித வாழ்வுரிமை மற்றும் அவர்களின் பாது காப்பு ஆகியவற்றை பாதிக்காமல் பேனர் வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.