சிதம்பரம், ஜூலை 11- கட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்டேட்பேங்க் ஏடிஎம் வாசலில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த வினோத் (25) என்பது தெரிந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு வினோத் அடைக்கப்பட்ட லாக்கப்பில் இருந்து ஏதோ சத்தம் வந்ததாகவும், காவலர்கள் ஓடிச்சென்று பார்த்த போது வினோத் தான் கட்டியிருந்த வேட்டி யால் அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பு ராயன், அசோகன், கீரைப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, வினோத்தின் உறவி னர்கள் மற்றும் பொதுமக்கள் விநோத்தின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, காவல்துறையினர் வினோத்தை அடித்து கொலை செய்துவிட்டு உண்மையை மறைக்கிறார்கள். விசாரணைக்கு அழைத்து சென்ற காட்டுமன்னார் கோயில் காவல் நிலைய காவலர்கள் பார்த்திபன், ராஜாவை பணிநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில், விநோத் உடல் பிரேத பிர சோதனைக்காக கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. கடலூர் மாஜிஸ்திரேட் மற்றும் சார் ஆட்சியர் முன்னிலையில் இரண்டு மருத் துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். இது வீடியோவிலும் பதிவு செய்யப்படும். மேலும் இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் தகவல் கொடுக்கப்ப டும். அதனடிப்படையிலேயே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.