tamilnadu

img

“மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் அவசியமே!”

“மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் அவசியமே!”

சென்னை, ஏப். 23 - தமிழ்நாட்டில், மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என்றும், அதற்கு அரசியலமைப்புச் சட்டமே வழிகாட்டியிருக்கிறது என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், “தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது” என்று பதில் அளித்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அவர்களும், உறுப்பினர் பொருத்தமில்லாத கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்து விட்டதாகவும் கூறியிருந்தார். இதனைக் குறிப்பிட்டு, தமது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதி விட்டுள்ள பெ. சண்முகம், “அமைச்சரின் பதிலும், சபாநாயகரின் கருத்தும் மூட நம்பிக்கையை பரப்பி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார். “மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு.  அறிவியலுக்கும், பகுத்தறி வுக்கும் பொருந்தாத மூட நம்பிக்கை என்பது வேறு. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என வள்ள லாரே பாடியுள்ளார்” என்பதைச் சட்டிக்காட்டியுள்ள பெ. சண்முகம், “மக்களிடம் பரப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர்ப்பலி உட்பட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநி லங்களில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது” என்று கூறியுள்ளார். “எனவே, சமூக சீர்திருத்தக் கருத்துக் கள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டி லும் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளைப் போலவே, 11 அடிப்படைக் கடமைகளையும் இந்திய அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்துள்ளது. இதன்படி, ‘‘அறிவியல் மனப்பான்மை, கேள்விகேட்கும் திறன் ஆகியவற்றை வளர்ப்பதும், சீர்திருத்தம் மற்றும், மனிதநேயத்தைப் பரப்புவதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை’’ என அரசியலமைப்புச் சட்டத்தின் 51-A(h) பிரிவு வலியுறுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.