ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி தலைமை செயலகம் நோக்கி பேரணி - மறியல்
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
சென்னை, ஏப். 22 - மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி ஆட்டோக் களுடன் தலைமை செய லகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற ஓட்டு நர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முத்தரப்பு குழு அமைத்து, விலைவாசி உயர்வுக்கேற்ப அறிவியல் பூர்வமாக கட்டணத்தை நிர்ண யிக்க வேண்டும், தேர்தல் வாக் குறுதிப்படி புதிய ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும், ஆட்டோ செயலியை அரசே தொடங்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் இரு சக்கர வாகன டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று (ஏப்.23) தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து சங்க கூட்டமைப்பு
அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது. அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து ஆட்டோக் களோடு ஓட்டுநர்கள் பேரணி யாக அணிவகுத்தனர். சாமி சிவானந்தா சாலை வழியாக சென்ற பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கி வந்த ஆர்.கபாலி, செல்வராஜ், ஜெய கோபால் (சிஐடியு), மு.சம்பத், மாரியப்பன், சுந்தரம் (ஏஐடியுசி), ஜி.காளிராஜ், பி.வேணுராம் (டிஎம்டிஎஸ்பி), என்.ரகு மிஸ்தார் (எஸ்டிடியு), எம்.ராஜேந்திரன் (ஏஐயுடியுசி), மனோகர் (விசிக), ரமேஷ் (எம்எல்எப்), மணி (இனோடா) உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது. அப்போது செய்தியாளர் களிடம் பேசிய அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணை ப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “2022ஆம் ஆண்டு மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளில் அமைச்சர் இரண்டு முறையும், அதிகாரி கள் பலமுறையும் கூட்ட மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கோரிக் கைகளை நிறைவேற்றவில்லை. வேலைநிறுத்தம், பேரணி உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். போக்குவரத்து துறை மானியக் கோரி க்கை மீதான விவாதம் சட்ட மன்றத்தில் நடந்து கொண்டி ருக்கும் நிலையில் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
மறியல்
ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மறியல் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனீபா போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசுகையில், “கோரிக்கைகளை வலி யுறுத்தி அடுத்தகட்டமாக குடும்பத்தோடு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என்றார். இந்த போராட்டத்தில் பேசிய, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.குமார் பேசுகை யில், “18 முறை போராட்டம் நடத்தியும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலை தொடருமானால் போராட்டம் தீவிரமாகும்” என்றார். சம்மேளன பொதுச் செய லாளர் எம்.சிவாஜி, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் இ.உமாபதி, பொருளாளர் ஏ.பக்கிரி உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோ சம்மேளனம் கண்டனம்
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னத்தின் தலைவர் வி.குமார், பொதுச் செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்டோ தொழிலாளிகளின் பலகட்ட போராட்டத்திற்குப் பிறகும், அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிற சூழ லில்தான் முற்றுகை, மறியல் போராட்டம் நடக்கிறது. போராட்டத்தின் நியாயங் களை உணராத காவல்துறை, தொழிலாளர்களை கைது செய்வதில் முனைப்பு காட்டு கிறது; இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கோரிக்கை களை நிறைவேற்ற உடனே வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.