tamilnadu

img

சென்னையில் பரவலாக மழை-மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் கோடை வெயில் கடுமையாக இருந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னையில் மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளான தேனாம்பேட்டை, மெரினா, நுங்கம்பாக்கம், சைதாபேட்டை, ஆழ்வார்பேட்டை, அண்ணாசலை,புரசைவாக்கம்,அயனாவரம்,வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை நகர்ப் பகுதி முழுவதும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.