தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் 6 மாத இலவச ஏ.சி. பயிற்சி
சென்னை, நவ. 11- அண்ணா பல்கலைக்கழ கம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தென்சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து குளிர்சா தனப் பெட்டி (பிரிட்ஜ்), ஏ.சி. சர்வீஸ் தொழில்நுட்ப பயிற்சியை 6 மாத காலம் இலவசமாக நடத்த உள்ளது. ஏழை மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடம் அளிக்கப்படும். 60 மாணவர்கள் இந்த படிப்பில் சேர அனுமதிக்கப்படு வார்கள். நவம்பர் 2019இல் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2020இல் முடிவடையும். வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடை பெறும். விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் வரும் 22ஆம் தேதியாகும். மேலும் விபரங்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சிபிடிஇ கட்டடம், கிண்டி பொறியி யல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25. தொலைபேசி: 044 - 2235 8601.
கீழ்க்கட்டளை அருகே 18 பவுன் நகை கொள்ளை
தாம்பரம், நவ.11- கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் முகமது ஆரீப். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஞாயிறன்று மாலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டை யில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் சாவியை வாசலில் கிடக்கும் பழைய செருப்பின் கீழ் வைத்து சென்றுள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த ஆரீப் கதவு திறந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.