tamilnadu

img

கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் எனக் குறிப்பிட்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயில்வோருக்கு அரசு சான்று வழங்குகிறது. 2022-23 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் எனக் குறிப்பிட்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 
இது குறித்து முதல்வர் ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில்,
"பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்." எனத் தெரிவித்துள்ளார்.