மாமல்லபுரம்,நவ.20- சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் டில்லி (19), மோகனா (15). இவர்கள் செவ்வாயன்று (நவ.19) இரவு மேலும் 2 வாலிபர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில், கேனில் பெட்ரோல் வாங்கினர். பின்னர் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது, சென்னை யில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற டெம்போ வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கர மாக மோதியது. இதில் டில்லி, மோகனா மற்றும் ஒரு வாலிபர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறை க்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் படுகாயம் அடைந்த வாலிபருக்கு சென்னை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான மற்றொருவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான வர்கள் கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்றதால் அவர்க ளது மற்றொரு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் எங்கேனும் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதை யடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்கேனும் கேட்பாரற்று மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக டெம்போ வேன் டிரைவர் பாபுவிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.