tamilnadu

திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் முக்கிய செய்திகள்

பாட்டியை கொலை செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, நவ. 29- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவ னாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா ( 55). இவர் தனி யாக வசித்து வந்தார். சரோஜாவின் மகள் அமுதாவின் மகன்  செல்வம் மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வரு கிறார்.  இந்நிலையில் வியாழக்கிழமை செல்வம் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரது பாட்டி சரோஜாவிடம் பணம்  கேட்டுள்ளார். அப்போது சரோஜா பணம் தர மறுத்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு பாட்டி வீட்டிலேயே தங்கிய செல்வம் நள்ளிரவு சரோஜாவின் தலையில் கல்லை  போட்டு கொலை செய்துவிட்டு, அவர் காதில் இருந்த கம்மல்,  பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.  சரோஜா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த உற வினர்கள் கலசபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சரோஜா  உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூ ரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கம்மல்களை செல்வம் செங்கல்பட்டில் அடகு வைத்தது தெரிய வந்தது.  இதையடுத்து காவல் துறை யினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருவண்ணாமலை, நவ. 29- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இதுநாள் வரை அரசின் உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அடையாள அட்டை, மருத்துவச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 3 புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலையை தலைகீழாக  மாற்ற புத்தக வாசிப்பு அவசியம் நீதிபதி சுவாமிநாதன் பேச்சு 

திண்டுக்கல், நவ. 29- திண்டுக்கல்லில் இலக்கியக் களம் சார்பாக நடத்தப்படும் எட்டாவது புத்தகத் திருவிழா வியாழனன்று டட்லி மேல்நிலைப் பள்ளியில் மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம் என கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.   துவக்க நிகழ்விற்கு இலக்கியக் களத்தின் தலைவர் முனை வர் குருவம்மாள் தலைமை வகித்தார். புத்தகக் கண்காட்சி யில் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், பிற்பட்டோர் நலத்துறை ஆணையருமான வள்ளலார், திண்டுக்கல் ஆட்சி யர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்காட்சியை தொடங்கி வைத்து சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் பேசியதாவது:- நான் அசுரன் படத்தில் நடித்த தனுசுக்கும் வழக்கறிஞராக இருந்திருக்கிறேன். நடிகர் கமலஹாசனுக்கும் வழக்கறி ஞராக இருந்திருக்கிறேன். ஆனால் அதைவிட பெருமை தரக் கூடியது என்னவென்றால் மாதொருபாகன் எழுதிய எழுத்தா ளர் பெருமாள்முருகனுக்காக வழக்கறிஞராக வாதிட்டதை பெருமையாகக் கருதுகிறேன். இன்றைக்கு இருக்கும் நிலை யை தலைகீழாக மாற்ற வேண்டும். அதற்காக நாம் புத்த கங்களை தேடிப் படிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவுகள் புத்த கங்களில் தான் உள்ளன. தலைவர்களின் வாழ்க்கை வர லாற்றைப் படியுங்கள். படிப்பதற்கு மொழி பெரிதல்ல. ஆங்கி லத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. தமிழில் குறைவு தான். நாம் படிப்பதன் மூலதான் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்றார்.