சென்னை, ஜூலை 13 - தமிழக சட்டப்பேரவை யில் வெள்ளியன்று (ஜூலை 12) நடந்த மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் பங்கேற்று பேசிய தளி தொகுதி திமுக உறுப்பினர் பிரகாஷ், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல மொழி பேசும் சிறுபான்மை மாண வர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது அந்த அந்த மொழிகளில் கேள்வித் தாள் இருக்க வேண்டும் என்றும் அவர் அவர் பேசும் மொழிகளிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், “பிற மொழி சிறு பான்மை மாணவர்கள் அவர்கள் பேசும் மொழியி லேயே கேள்வித்தாள்கள் வழங்கப்படுகின்றன. எந்த மொழியில் தேர்வெழு தினாலும் கேள்வித்தாள் தருகிறோம். சில மாண வர்கள் முன்கூட்டியே எந்த மொழியில் தேர்வெழுதப் போகிறோம் என்பதை பட்டியலிட்டு கொடுத்து விட்டால் அந்தந்த மொழி களில் கேள்வித்தாள் வழங் கப்படும் என்றார்.