சென்னை, ஆக. 17 - தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் வடசென்னை மாவட்ட 12வது மாநாடு ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதி களில் சென்னை பெரிய மேட்டில் நடைபெற்றது. வெள்ளியன்று (ஆக. 16) நடைபெற்ற மகளிர் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ம.அந்தோணிசாமி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் எஸ்.ஏ.வெற்றிராஜன் வர வேற்றார். மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் ப.சுந்தரம்மாள் துவக்கவு ரையாற்றினார். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெ.சரஸ்வதி வேலை அறிக்கையை சமர்பித்தார். பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில அமைப்பாளர் அருணா, மகளிர் துணை க்குழு தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘சமூக சூழலும் பெண்களின் நிலையும்’ என்ற தலைப்பில் சுசிலாஆனந்த் கருத்துரையாற்றினார். பின்னர் சனிக்கிழமை யன்று (ஆக.17) நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு துணைத் தலைவர் த.குண சேகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொருளாளர் எம்.தங்கராஜ் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜெ.பட்டாபி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எஸ்.பார்த்திபன் வரவு- செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சகோதர சங்க நிர்வாகிகள் ஆர்.சர்வமங்களா (காப்பீட்டு க்கழக ஊழியர்சங்கம்), மாவட்ட செயலாளர் எம்.வெங்கடேசன் (அரசு ஊழியர் சங்கம் தென் சென்னை), கங்காதரன், சத்தியநாதன், சாந்தகுமார் (ஆசிரியர்கள் சங்கம்),பேரா.காந்திராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்ட த்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செய லாளர் மு.அன்பரசு, வர வேற்புக்குழு துணைத்தலை வர் பி.எஸ்.அப்பர், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். நிறைவாக வி.விஜயகுமார் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்:-
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர் மற்றும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும், கடந்த 35 ஆண்டுகள் போராடிப்பெற்ற உரிமைகளையும், சலுகை களையும் முறையாக வழங்க வேண்டும், ஆட்குறைப்பு அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், மதிப்பூதியம், தொகுப்பூதியம்,ஒப்பந்த முறை முற்றாக ரத்து செய்ய வேண்டும், கதர் வாரியத்தை அரசு துறையாக அறிவிக்க வேண்டும், அரசு மனநல காப்பகத்தில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும், சென்னை மாநகராட்சியில் உள்ள அடிப்படை பணி களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவைம் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
புதிய நிர்வாகிகள்:
மாவட்டத் தலைவராக ப. சுந்தராம்பாள், செயலாளராக எம்.அந்தோணிசாமி, பொருளாளராக ஏழுமலை உள்ளிட்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.